பஞ்சாபில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவர்கள், பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.!

Advertisements
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாபில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவர்கள், சென்னை திரும்பி
உள்ளனர்.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாபில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவர்கள் அரசின் உதவியால் பத்திரமாக சென்னை திரும்பி உள்ளனர். அதன்படி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து 5 மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், தாங்கள் தங்கியிருந்த இடத்தில் டிரோன் தாக்குதல் நடந்ததாகவும், பாதுகாப்புக் கருதியே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்ததாகவும், பல மாணவர்கள் தொடர்ந்து சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *