
இம்முறையும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவாரென, பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், ‘அடுத்து பெண் தலைவி ஒருவர் பிரதமராக வருவார்’ என, துமகூரு, திப்டூர், நொனவினகெரேவின் யஷ்வந்த் குருஜி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இம்முறை ஒரே கட்சி, சொந்த பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர முடியாது. தொங்கு லோக்சபா அமையும். மற்ற கட்சிகளுடன் ஒரு கட்சி, கூட்டணி அரசு அமைக்கும். நாட்டுக்கு, பெண் பிரதமர் கிடைப்பார்.
அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தராக வேண்டுமா
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன், யஷ்வந்த் குருஜி, ‘கர்நாடகாவில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி, காங்கிரஸ் ஆட்சி அமையும்; தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்’ என ஆருடம் கூறியிருந்தார். அது நிஜமானது.
அதற்கு முன் கொரோனா குறித்தும், அவர் கூறிய ஆருடம் பலித்தது. எனவே, அவரது தற்போதைய ஆரூடமும் பலிக்கும் என, அவரது மடத்தின் பக்தர்கள் கூறி வருகின்றனர்.




