Advertisements

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதுகின்றன.
குஜராத் மாநிலம், வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகி உள்ளது. டெல்லி அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தனது முதல் கோப்பையை வெல்ல தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று யார்? கோப்பையை வெல்லப்போகிறார்கள் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements


