
உப்பு என்பது நம்முடைய உடலில் திரவ சமநிலை, நரம்புச் செயல்பாடு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். எனினும் அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
*உப்பு என்பது நம்முடைய உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகள் நடைபெறுவதற்கு மிகவும் அவசியம். ஆனால் அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படலாம். எனவே ஒருவருடைய வயது, வாழ்க்கை முறை மற்றும் உடல் நிலையின் அடிப்படையில் ஒருவர் எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
*உப்பு என்பது நம்முடைய உடலில் திரவ சமநிலை, நரம்புச் செயல்பாடு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். எனினும் அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த வகையில் வெவ்வேறு வயதிலான நபர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தினசரி உப்பு அளவு எவ்வளவு என்பதை விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
*பச்சிளம் குழந்தைகள் (0 முதல் 12 மாதங்கள்) :
பச்சிளம் குழந்தைகளுக்கு மிகக் குறைவான அளவிலான உப்பைக் கொடுப்பது அவசியம். அவர்களுடைய சிறுநீரகங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காத காரணத்தால், அளவுக்கு அதிகமான சோடியத்தை அவர்களால் செயல்படுத்த முடியாது. எனவே அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1கிராம் உப்புப் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் அவர்களுக்குத் தேவையான சோடியத்தை வழங்கும்.
1 முதல் 3 வயதிலான குழந்தைகள் :
இந்த வயதில் குழந்தைகள் இன்னும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டிருப்பார்கள். எனவே அவர்களுக்கு ஒரு நாளைக்கு தோராயமாக 2 கிராம் உப்பு போதுமானது. அதாவது மூன்றில் ஒரு பங்கு டீஸ்பூன் உப்பு சரியான அளவாக இருக்கும்.
4 முதல் 8 வயது குழந்தைகள் குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்பொழுது அவர்களுடைய உப்புத் தேவை லேசாக அதிகரிக்கிறது. எனவே இந்த வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிராம் உப்பு அல்லது 1.2 கிராம் சோடியம் போதுமானதாக இருக்கும்.
9 முதல் 18 வயது குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் :
சற்று வளர்ந்த குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கு அதிக அளவு உப்பு தேவைப்படும். எனினும் அவர்களும் உப்பை அளவாகச் சாப்பிடுவது மிகவும் அவசியம். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு அல்லது 2 கிராம் சோடியம் பரிந்துரை செய்யப்படுகிறது. இது தோராயமாக ஒரு டீஸ்பூன் அளவு உப்பு.
19 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட பெரியவர்கள் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு சரியானதாக இருக்கும். இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு 3 கிராமுக்கு குறைவான சோடியத்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக நோய் இருப்பவர்கள் இந்த அளவைவிட குறைவாக எடுத்துக் கொள்வது ஆலோசிக்கப்படுகிறது.
வயதானவர்கள் (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) :
வயதாகும்பொழுது மீண்டும் நம்முடைய சிறுநீரகங்களின் செயல் திறன் சோடியத்தை செயல்படுத்துவதில் குறைவான திறனை வெளிப்படுத்தும். எனவே வயதானவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவான உப்பு எடுத்துக் கொள்வது அவசியம்.
ஆகவே இறுதியாக உப்பை மிதமான அளவு சாப்பிடுவது முக்கியம். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெஸ்டாரண்டுகளில் உணவுகள் வாங்கி சாப்பிடுவது உப்பு உட்கொள்ளலை குறைக்க உதவும். எந்த விதமான உணவைக் கடைகளிலிருந்து வாங்கும்பொழுது அதில் உள்ள லேபிலை படிக்க மறக்காதீர்கள். மேலும் அளவுக்கு அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும்.



