டாக்டர் எங்கே? தட்டி கேட்ட நடிகர் கஞ்சா கருப்பு…!

Advertisements

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற கஞ்சா கருப்பு சமீப காலங்களில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இன்று காலைச் சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நீண்ட காலமாகக் காக்க வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டினார்.

காலை 7 மணியில் இருந்தே மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைக்கப்பட்டதாகக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *