
காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக்கடலில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் வடதமிழ்நாடு- புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு வந்து வலுகுறையும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




