
பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை தொடங்காது என பாகிஸ்தான் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை யடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.இதில், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்றும் பாகிஸ்தான் மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும நாடாக இருக்காது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சீனாவும் அதிபர் டிரம்ப் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதில், சீனா, ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு என்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளது.



