திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதற்கு நடிகை குஸ்பு கண்டனம்.!

Advertisements

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, தஞ்சையிலிருந்து இன்று சென்னை வந்த காவல்துறைக் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாகக் குற்றம்சாட்டிய அவர், “தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *