
உண்மையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றாலும், இது தொடர்பான பல கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன.
நல்ல சருமத்தை பெறுவதற்கு அதிக தண்ணீர் குடித்தாலே போதும் என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். குளிர்காலம் வந்துவிட்டதால் சருமம் வறண்டு, அதில் வெள்ளை நிற திட்டுக்கள் தோன்றுவது அன்றாட பிரச்சனையாக மாறிவரும் இந்தச் சமயத்தில் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் வறண்ட சரும பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். உண்மையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றாலும், இது தொடர்பான பல கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. எனவே இந்தப் பதிவில் சில கட்டுக் கதைகளின் பின்னணியில் உள்ள உண்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அவசியம் என்ற பொதுவான உண்மையிலிருந்து தண்ணீர் குடிப்பது நேரடியாகச் சருமத்தை பாதிக்கும் என்ற யோசனை எழுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய உட்புற உறுப்புகள் சீராகச் செயல்படுவதற்கு அவசியம். ஓரளவுக்கு இது நம்முடைய சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் போதுமான அளவைவிட அதிக அளவு தண்ணீர் குடிப்பது எந்த விதத்திலும் வறண்ட சரும பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது.
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகக் காரணம் என்ன?: குளிர்காலம் பொதுவாக நம்முடைய சருமத்தில் மிகவும் கடினமாகச் செயல்படும். எனவே இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கு தண்ணீர் குடிப்பது மட்டுமே போதாது. காற்றில் உள்ள குறைவான ஈரப்பதம் மற்றும் வீட்டிற்குள் இருக்கும் வெப்ப அமைப்புகள் சருமத்தை பாதிக்கிறது. இந்த வறண்ட காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது.
நம்முடைய சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை மேற்புறத்தில் உள்ள செல்களும், இயற்கை எண்ணெய்களும் பாதுகாக்கின்றன. ஆனால் குளிர் காலத்தில் கடுமையான காற்று மற்றும் வெந்நீர் குளியல் ஆகியவை இணைந்து இந்த வெளிப்புற பாதுகாப்பு அமைப்பை அகற்றி விடுகின்றன. இதனால் சருமத்திலிருந்து ஈரப்பதம் எளிதில் வெளியேறுகிறது. அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் வெந்நீரில் குளிப்பது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சியை ஏற்படுத்தும்.


