
ஒகேனக்கல்:
கர்நாடகாவில் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் விளைவாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக மாறுபட்ட அளவுகளில் காணப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஒகேனக்கல்லுக்கு 500 கனஅடியாக நீர் வந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மிகுந்து பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 8 மணிக்கு நிலவரப்படி நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் பெருக்கமாக ஓடுகிறது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சேர்ந்து பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை அனுபவித்தனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே விழும் தண்ணீரை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றின் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
