புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Advertisements

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:

* தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை வழங்கி வருகிறது.

* தொடக்க கல்வி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது, பள்ளிக்கு மாணவர்களின் வருகையைக் குறைத்து, இடைநிறுத்தங்களை அதிகரிக்கும்.

* தேசிய கல்வி கொள்கை, இடைநிறுத்தங்களை அதிகரிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

* மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக் கூடாது.

* தமிழின் பெருமையைப் பிரதமர் முன்னெடுத்துள்ளதாகக் கூறி, இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் கேட்டுள்ளார்.

* இளைய சமுதாயத்திற்காக நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள் என்றால், விதிகள்மூலம் நிர்பந்திக்கக் கூடாது.

* மருத்துவம் முதல் இஸ்ரோ வரை இருமொழிக்கொள்கையை பயன்படுத்திய அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

*மாணவன் காலில் சங்கிலியைக் கட்டி ஓட விடும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது.

* தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.

* மத்திய அரசால் தன்னிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது.

* மத்திய அரசு நிபந்தனையின்றி நிதி வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *