
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:
* தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை வழங்கி வருகிறது.
* தொடக்க கல்வி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது, பள்ளிக்கு மாணவர்களின் வருகையைக் குறைத்து, இடைநிறுத்தங்களை அதிகரிக்கும்.
* தேசிய கல்வி கொள்கை, இடைநிறுத்தங்களை அதிகரிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
* மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக் கூடாது.
* தமிழின் பெருமையைப் பிரதமர் முன்னெடுத்துள்ளதாகக் கூறி, இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் கேட்டுள்ளார்.
* இளைய சமுதாயத்திற்காக நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள் என்றால், விதிகள்மூலம் நிர்பந்திக்கக் கூடாது.
* மருத்துவம் முதல் இஸ்ரோ வரை இருமொழிக்கொள்கையை பயன்படுத்திய அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
*மாணவன் காலில் சங்கிலியைக் கட்டி ஓட விடும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது.
* தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.
* மத்திய அரசால் தன்னிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது.
* மத்திய அரசு நிபந்தனையின்றி நிதி வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
