கீவ் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் -16 பேர் உயிரிழப்பு!

Advertisements

உக்ரைன் தலைநகா் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இதில் 30 குடியிருப்புகள், ஒரு பள்ளி, மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன.
இதுகுறித்து உக்ரைன் அரசு, பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷ்யா பலவகை ‘பாலிஸ்டிக்’ மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள், ட்ரோன்களை ஒருங்கிணைத்து இத்தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் ராணுவத் தளவாட இலக்குகளையே குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி, அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு உக்ரைனிடம் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா கடந்த சில நாள்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, உக்ரைனைப் பாதுகாக்க கூடுதல் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை வழங்குமாறு சா்வதேச நாடுகளுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *