
பா.ஜ.கவின் முரட்டு அடிமையாக எடப்பாடி. பழனிச்சாமி திகழ்ந்து வருகிறார் என்று தமிழக துணைமுதலமைச்சசர் உதயநிதி கூறியுள்ளார்.
தஞ்சையில் மகாராஜா மகால் திருமண மண்டபத்தில் நடைபெறும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் இல்லத் திருமணவிழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்டுத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது உரையாற்றிய உதயநிதி, தமிழ்நாடு இந்தியாவிலேயே வளருகின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக விளங்கி வருகின்றது என்றும் இதையெல்லாம் பொறுக்க முடியாத ஒன்றிய பாசிச பாஜக அரசு பல்வேறு வகையில் நம்முடைய அரசுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜக-வுடைய ஒரு முரட்டு அடிமையா திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றும் புதிய கலவி கொள்கையைக் கொண்டு வந்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கப்பார்க்கிறார் என்றும் உதயநிதி கூறியுள்ளார்.


