Advertisements

ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் எண்ணெய் மீண்டும் தடையின்றிப் பாயும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா போர் ஒப்பந்தம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும் எனத் தெரிவித்தார்.
ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த பல அதிபர்கள் முயன்றனர். ஆனால் தனக்கு முன் அவர்கள் அனைவரும் தோல்வியையே தழுவினர். எனவே, வரும் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நீரிணை திறக்கப்படுவதன் மூலம், இந்தப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இரு முனைகளிலும் எண்ணெய் மீண்டும் தடையின்றிப் பாயும் எனத் தெரிவித்தார்.
Advertisements



