
எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை: கடந்த 2021ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்கச் சென்ற சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 3 பேர் கைதான நிலையில் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்ஐ பூமிநாதன் வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Trichy Cop Boominathan Murder

