Sardar Vallabhbhai Patel: பிறந்த தினம் இன்று!

Advertisements

அகண்ட பாரதம் அமைய வித்திட்டு அழியாப் புகழோடு விளங்கும் அணையா விளக்கு! சர்தார் வல்லபாய் பட்டேல்…

இரும்பு மனிதர் என்று  போற்றப்படும் சர்தார் வல்லபாய்  பட்டேலின் பிறந்த தினம் இன்று. ஒற்றுமையின் ஒளிச்சுடர். இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த தலைவர். சுதந்திர போராட்ட தியாகி, வீரர்.  குஜராத் மாநிலத்தின் குலக் கொழுந்து. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நாயகன்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம மந்திரியாகவும்  உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய்  பட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் சொந்த ஊர் குஜராத் மாநிலத்திலுள்ள கரம்சாத் ஆகும். இவர் அக்டோபர் 31,1875-ஆம் ஆண்டு குஜராத்தில் நடியாத் எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜாவர்பாய், தாயார் லாட்  ஆவார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் தீவிர பக்தர் ஆவார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார்.

அது அவரது உடலை கட்டுக்கோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. பட்டேல்  பள்ளிப் படிப்பை முடித்து 1897 -ல்  இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் பட்டம் படித்தார். இரண்டே ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று 1901-ல் இந்தியா திரும்பினார். சர்தார் வல்லபாய் பட்டேல் மகாத்மா காந்தியின் தத்துவத்தால் ஆழமாக ஈர்க்கப்பட்டார் அவருடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

1928 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சர்தார் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931 இல் வரலாற்று சிறப்புமிக்க காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்த பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். 1942இல் வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா நாடு மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினையானது பாரிய வகுப்புவாத வன்முறைக்கு வழிவகுத்தது, மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொல்லப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் பட்டேலின் மிக முக்கியமான பங்களிப்பு இருந்தது. பிரிவினைத் திட்டத்தில் இடம் பெறாமல் நாடு முழுவதும் சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டுவர அயராது பாடுபட்டார்.

இவர் தனது இராஜதந்திர திறன்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி, சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு வற்புறுத்தினார், இதன் விளைவாக 560 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டது. சர்தார் வல்லபாய்  பட்டேலின் நிர்வாகத் திறன்கள் புகழ்பெற்றவை. இவர் ஒரு திறமையான அமைப்பாளர் மற்றும் திறமையான நிர்வாகி ஆவார், இவர் சுதந்திர இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த இவர், நாட்டின் நிர்வாக இயந்திரத்தை அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியாவின் ஒற்றுமை அவசியம் என்று இவர் உறுதியாக நம்பினார்.


அவரது சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் சர்தார் படேலுக்கு பல விருதுகள் மற்றும் கௌரவங்களை வழங்கி கௌரவித்துள்ளது. சர்தார் பட்டேல் தேசிய ஒருமைப்பாட்டு விருது என்பது இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது ஆகும், இது நாட்டில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

1909ம் ஆண்டு பட்டேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய மும்பையில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அப்போது பட்டேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை  குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு  கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பாரம்பரியம் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக அரசியல் மற்றும் பொது சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது தலைமைத்துவ திறன்கள், நிர்வாக திறன்கள் மற்றும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இன்னும் இந்தியாவில் ஆர்வமுள்ள தலைவர்களால் ஆய்வு செய்யப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இந்தியாவின் மதிப்புகளை நினைவூட்டுவதாக உள்ளது. தேசத்தின் தலைவிதியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய சர்தார் பட்டேல் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று எப்போதும் நினைவு கூரப்படுகிறார்.

அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.இவர் 1950- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி தனது 75-ம் வயதில் இறந்தார்.

1991-ல் பட்டேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் நினைவாக ஒற்றுமைக்கான சிலை,  நர்மதா மாவட்டத்தில் உள்ளது. அவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேல் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் 182 மீட்டர் (597 அடி).

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு வானூர்தி நிலையம், சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் அகாடமி, சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி போன்றவை இவரின் நினைவாக  நாம்  போற்றி வருகிறோம். வாழ்க பாரதம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *