Today Gold Price:வரலாறு காணாத உச்சம்..நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Advertisements

தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை அப்போது பதிவு செய்தது.

அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த மாதம் (ஆகஸ்டு) இறுதியிலிருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.

தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், கடந்த 21-ந் தேதி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *