
இந்தியாவின் தேசிய விலங்கான புலி அரிதான சமயங்களில் மனிதர்களை வேட்டையாடும். அண்மையில் கூடக் கேரளாவில் மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.
இந்நிலையில், வயல்வெளியில் பதுங்கி உள்ள புலி ஒன்று அவ்வழியே பைக்கில் வந்த இருவரை வேட்டையாட முயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பதுங்கி வரும் புலியைத் தூரத்தில் இருக்கும்போதே அவர்கள் பார்த்துவிடுகின்றனர்.
ஆதலால் புலி வேட்டையாடாமல் சாலையில் அமர்ந்து ஓய்வெடுக்க துவங்கி விடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
புலிகள் தங்கள் வேட்டையில் மிகவும் திறமையானவை, மேலும் அவை தங்கள் வேட்டையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.
புலிகள் பொதுவாகத் தங்களால் எளிதில் வேட்டையாடக்கூடிய விலங்குகளைத் தேர்ந்தெடுக்கின்றன, மேலும் அவை தங்கள் வேட்டையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுகின்றன.
எனவே, புலிகள் தங்கள் வேட்டையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தால், அதைக் கைவிட்டு வேறு இலக்கைத் தேடும்.
இது புலிகளின் இயற்கையான நடத்தை மற்றும் உயிர்வாழும் உத்தியின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
