
ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமிக்கக்கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பரிதுரை செய்தார்.
அதன்படி, கர்நாடக மாநிலத்திலிருந்து ஹேமந்த் சந்தன் கெளடா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுரேந்தர் ஆகிய இருவரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் இருவரும் நீதிபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும், குமரப்பன், ராஜசேகர் ஆகிய இருவரும் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். இதனால், நீதிபதிகளின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்துள்ளது.
