
நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் கார்த்திகேயன் சாலையில் அமுத கரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர் தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுத சொல்வது வரலாறு காணாத அத்துமீரல் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
