Advertisements

தமிழக முழுவதும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.
தமிழக முழுவதும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில், 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேரும், சிறைத் தேர்வர்களாக 281 பேரும் எழுதுகின்றனர்.
இதில், முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, தேர்வறையில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 540 பறக்கும் படை ஆசிரியர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நிரந்தரமாக தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Advertisements



