2-ம் நாள் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலைத் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காகச் சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்குத் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக முன்னாள் எம்.பி. ராமோகன் உயிரிழந்த நிலையில் சட்டசபையில் இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விக்குத் துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். 2-வது நாளான இன்றைய கூட்டத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *