பள்ளி மாணவி தற்கொலை!
சென்னை: ராயபுரம் ஆஞ்சநேய நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது படிப்பை நிறுத்தி விடுகிறேன் எனத் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவி தற்கொலை சம்பவம்குறித்து ராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Suicide

