Andra : கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!!

Advertisements

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்தராவில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலுக்கு இன்று அளவுக்கு அதிகமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் காசிபுக்க வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு இன்று காலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் , கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு 9 பேர் இறந்து விட்டனர் .

மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் சிலருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *