
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,
சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 365 பேருந்துகளும், பிப்ரவரி 1-ந் தேதி (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலி பேருந்துகள் ருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி வெள்ளிக்கிழமை 60 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை 60 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து 31-ந் தேதி 20 பேருந்துகளும் பிப்ரவரி 1-ந் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.
இதே போன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
