வெலிங்டன் ராணுவ மையத்தில் சாகச நிகழ்ச்சியில் அசத்திய வீரர்கள்!

Advertisements

குன்னூர்:

பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி சர் பிரான்சிஸ் புட்சாரிடமிருந்து இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் கே.எம்.கரியப்பாவிடம் ஜனவரி 15-ந்தேதி ராணுவ பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் நேற்று 77-வது ஆண்டு ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அப்போது ராணுவ வீரர்கள் பங்கேற்ற களரி, செண்டைமேளம், சிலம்பம், வாள்சண்டை போன்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தொடர்ந்து தற்காப்பு கலைகளும் செய்து காண்பிக்கப்பட்டன. பள்ளிக்குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து ஊக்குவித்தனர்.

வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகளைப் பள்ளி மாணவர்கள், அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் கண்டுகளித்து ரசித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *