
சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலின் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பாவோலினி, ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெட்டோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு ஏழு, ஆறுக்கு மூன்று என்கிற புள்ளிக் கணக்கில் பாவோலினி வெற்றிபெற்றார்.
இறுதிப் போட்டிக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ள அவர், போலந்தின் ஈகா சுவியாடெக்கை எதிர்கொள்ள இருக்கிறார்..


