தென்மேற்கு பருவமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்!

Advertisements

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் எங்கும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மேகதாது அணைத் திட்டத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *