
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு இருந்தும் தமிழகத்தில் இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், கர்நாடகா, பிகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இதை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
இந்த கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யும் சமூகநீதி அடிப்படையிலான பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார்.


