திரள் நிதி தருக ..! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்.!

Advertisements
வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தளப் பதிவில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதில், தேர்தலில் 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.
ஆனால், மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை, தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும், என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
தொடர்ந்து, எப்போதும் போல தமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இதேபோல், திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *