Sebastian Church Festival: கொடியேற்றத்துடன் துவங்கியது செபஸ்தியார் ஆலய பெருவிழா!

Advertisements

நாகை அருகே பிரதாபராமபுரம் பாலத்தடியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய 49-ஆம் ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் முக்கிய நிகழ்வான புனித செபஸ்தியாரின் பெரிய தேர்பவனிபிப்ரவரி13ஆம்தேதிநடைபெறுகிறது.

நாகை மாவட்டம்வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் பாலத்தடியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் 49ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, பேண்ட் வாத்தியங்கள் முழங்கக் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பங்கு தந்தை ஆதி.ஆரோ கொடியைப் புனிதம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வண்ணமிக்கு வான வேடிக்கையுடன் கிறிஸ்தவர்கள் மலர் தூவ கொடி மரத்தில் புனித செபஸ்தியாரின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவில் முக்கிய நிகழ்வான புனித செபஸ்தியாரின் பெரிய தேர்பவனிபிப்ரவரி13ஆம்தேதிநடைபெறுகிறது.இவ்விழாவில் கிறிஸ்தவ சமுதாய தலைவர் புஷ்பராஜ், நிர்வாகிகள் ஏசுராஜ், சௌரிமுத்து, மத்தியராஜ், அருட்சகோதரிகள், நாட்டாண்மை மற்றும் பஞ்சாயத்தார்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *