ஆசிரியரை சரமாரியாக அறைந்த பள்ளி முதல்வர்!

Advertisements

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் பள்ளி முதல்வர், ஆசிரியர் ஒருவரை சரமாரியாக அடிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நவ்யூக் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ராஜேந்திர பார்மர் மாணவர்களைத் திட்டிக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ராஜேந்திர பார்மரிடம் பள்ளி முதல்வர் ஹிதேந்திர சிங் தாகூர் விசாரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர், ஆசிரியரை 18 முறை அறைந்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இது தொடர்பாக விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *