
நடிகை சமந்தா தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய திருமண புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் சில மாதமாகவே காதலித்து வருகின்றனர். சமந்தாவின் முதல் கணவர் நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா ராஜ்யை காதலிக்க தொடங்கினார். இவர்கள் இருவரையும் பற்றி பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து சமந்தா எந்த இடத்திலுமே விளக்கம் கொடுக்கவில்லை.
சமந்தாவின் திருமணம் இன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த திருமண பங்க்ஷனில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களை சமந்தா பதிவிட்டு இன்றைய நாள் 1 – 12- 2025 என்று குறிப்பிட்டு இன்று என்னுடைய திருமணம் நடைபெற்றது இனிய புதிய தொடக்கம் என்பது போல போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சமந்தா, நாக சைதன்யா உடன் நடந்த திருமணத்திற்கு பிறகு இயக்குனர் ராஜ் நிடிமோரு இயக்கிய தி ஃபேமிலி மேன் 2 சீரிஸில் நடித்திருந்தார். அந்த சீரிஸில் சமந்தா கவர்ச்சியாக நடித்தார். அதனால்தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் பிரச்சனையே வந்ததாக அந்த நேரத்தில் செய்திகள் வெளியானது.
பிறகு நாக சைதன்யாவை பிரிந்ததும் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ்யை சமந்தா காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. சமந்தாவை போல ராஜுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். சமந்தாவுக்கு இப்போது 38 வயதாகிறது. ராஜ்க்கு 46 வயது ஆகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா பாலிவுட்டில் நடிக்க தொடங்கி பிறகு ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருந்தார். சமீப காலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். ஆனால் அதிலும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இன்று தன்னுடைய புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் சமந்தாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.



