RTI சட்டத்திற்கு மத்திய பாரதிய ஜனதா காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு..!

Advertisements

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய பாரதிய ஜனதா அரசு சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார் .

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தச் சட்டத்தை முற்றிலும் சிதைத்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், மோடி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் சட்டத்தை வலுவிழக்கச் செய்து, ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதித்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தது.

கடந்த 2019- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் சட்டத் திருத்தங்கள், தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் மற்றும் சம்பளத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த அனுமதித்தன. மேலும், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பொது நலன் பிரிவை வலுவிழக்கச் செய்துள்ளது. மேலும், ஊழலைப் பாதுகாக்க தனியுரிமை விதிகளைப் பயன்படுத்துகிறது.

மத்திய தகவல் ஆணையம், தலைமைத் தகவல் ஆணையர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் இது 7-ஆவது முறையாக இந்த முக்கியப் பதவி காலியாக விடப்பட்டுள்ளதாகவும்  தற்போது 8 பதவிகள் காலியாக உள்ளதாகவும் 15 மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாததால், மேல்முறையீட்டு செயல்முறை முடங்கியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோருக்கு நீதி தொடர்ந்து  மறுக்கப்படுவது வேதனை அளிப்பதாக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன குற்றம் சாட்டி உள்ளார்

முக்கியத் தகவல்களை மறைப்பதன் மூலம், அரசு தரவு கிடைக்கவில்லை என்ற கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறது. கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 100- க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது உண்மையைத் தேடுபவர்களை தண்டிக்கும் ஒரு பயங்கரமான சூழல் ஆகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால்  அறிமுகப்படுத்தப்பட்டு, அக்டோபர் 12, 2005- அன்று நடைமுறைக்கு வந்தது. இது பொது அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை குடிமக்களுக்கு வழங்குகிறது. இது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்கிறது. இந்தச் சட்டம், 2002 ஆம் ஆண்டின் தகவல் சுதந்திரச் சட்டத்திற்குப் பதிலாக வந்தது.

மேலும், மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களை நிறுவி, அதன் செயல்பாட்டை கண்காணிக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், தகவல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மீது மத்திய அரசுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுத்தன.

குறிப்பாக  டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், கடந்த 2023- இன் கீழ் கொண்டு வரப்பட்டன  மேலும் சில மாற்றங்கள், தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *