டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாளை முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தங்களுடைய மரியாதைய செலுத்துனாங்க. அந்த நிகழ்வில், கலந்துகொண்ட மல்லை சத்யா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்துன பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்தாங்க. அவர் குடுத்த அந்த பேட்டி தான் இப்போ அரசியல் வட்டாரத்துல பரப்பரப்ப கிளப்பி இருக்கு….
திருச்சியில் அவர் போசும்போது கூட போட்டி எங்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமானது தான்-னு சொன்னதை ஒரு வரலாற்று நிகழ்வா நாம் வரவேற்றாலும், இந்த அல்லு சில்லுகளுக்கு எல்லாம் இங்கு இடமில்லை என்று சொன்னால் அதில் மதிமுக-வும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
திராவிட முன்னேற்றத்துடைய தயவால் தான் தலைவர் வைகோ அவர்கள் 29 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் டெல்லி தர்பால் மன்றத்தில் அவர் களமாடினார் நாவாடினார். நான்கு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் 24 ஆண்டு காலம், ஐந்த ஆண்டு காலம் மக்களவையில் பணியாற்றி ஏறக்குறை 29 ஆண்டுகள் அவர் நாடாளுமன்றத்தில் பணியாற்றினார் என்று சொன்னால் அந்த துரதஷ்டம் தான் அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தது. அவருடைய மகன் இன்றைக்கு திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அதற்கும் திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
சின்ன குழந்தை மாதிரி தலைவர் வைகோ பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், எங்களுக்கு இத்தனை தொகுதிகள் கொடுத்தா தான் நிற்போம் என்று சொன்னார். அதே போன்று பொதுவுடமை இயக்கங்களும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள். மக்கள் நீதி மையம் எங்களுக்கான உரிய இடம் கிடக்கவில்லை எனவே நாங்கள் சுயமரியாதையோடு வெளியே நிற்கிறோம் என்று சொன்னார்.
சுயமரியாதை பற்றி வாய்கிழியே பேசுகின்ற தலைவர் வைகோ அவர்கள் ஏன் அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல் திராவிட முன்னேற்ற கழகத்துடைய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பதை அவர் தான் சொல்லணும்.
இன்றைக்கு ஆட்சி இல்லை என்கின்ற காரணத்தினால் அவதூரை பரப்புவதும், சேட்டைவாரி பூசுவதும், தமிழக வெற்றி கழகத்தை, திராவிட வெற்றி கழகமாக நாங்கள் பார்க்கிறோம் என்று துரை வைகோ பேசுவதும் ஒருபோதும் திராவிட இயக்கத்தினர் ஏற்றுக்கொள்ளவே மாட்டாங்க என்றும் தெரிவித்தார்.


