Raja Kannappan: தி.மு.க. அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

Advertisements

பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது என்று உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: புதுவை மாநில தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசியதாவது:-

இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். திராவிட இயக்கத்தை கட்டி காக்க அவர் பின்னால் நாம் அணிவகுக்க வேண்டும்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார் ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது.

இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.
தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எதுவாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

தமிழகம், புதுவையில் ஒரு காலமும் தாமரை மலராது. புதுவையிலும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும்.காங்கிரஸ் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. கொஞ்சமாவது உழைக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார்.

புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும். நாராயணசாமி கோபித்து கொள்ள கூடாது.

சீட்டு வாங்க மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்து கின்றனர். அதனால் என்ன பிரயோசனம்? உழைக்கனும். மக்களுக்கு நல்லது செய்யனும். மக்களுக்காக கட்சி நடத்த வேண்டும். தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது. சீட்டு கேட்பது. இதனால்தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுபடவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *