பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!

Advertisements

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் அவர், தண்ணீர் தேங்காதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அடுத்தகட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அமுதாமும், மாவட்ட ஆட்சியரும் உள்ளிட்ட அதிகாரிகளும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *