மாணவர்களை மன்னிக்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை – ராகுல் காந்தி!

Advertisements

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது தங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய மாணவர்களை மன்னித்துவிட்டதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இழக்கப்படும் ஒவ்வொரு இளம் உயிருக்கும் பின்னால் அவர்களை விட்டு நீங்காத வலியைச் சுமக்கும் குடும்பங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சீர்கெட்ட கல்வி முறை, கசிந்த வினாத்தாள்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் காரணமாக மாணவர்களின் பல ஆண்டுகாலத் தயாரிப்பு ஒரே இரவில் அழிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேர்மையற்ற ஒரு அமைப்பில் மாணவர்களை நேர்மையாக இருக்கச் சொல்லும் அரசு, துயருறும் பெற்றோரையோ அல்லது எதிர்காலம் திருடப்பட்ட மாணவர்களையோ இதுவரை சந்தித்ததே இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் பேசுவதைக் கண்டித்துள்ள அவர், இந்திய மாணவர்கள் பிரதமரை மன்னிக்கத் தேவையில்லை என்றும், மாறாகத் தங்களின் எதிர்காரியங்களைச் சீரழித்ததற்காகப் பிரதமர் மோடிதான் மாணவர்களிடம் மன்னிப்புப் பெற வேண்டும் என்றும் தனது பதிவில் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *