
பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது எனக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் எதிர்ப்பு!
இதுகுறித்து காங்., எம்.பி ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது. கூட்டாளிகளைச் சமாதானப்படுத்துகிறது. சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். காங்கிரசின் முந்தைய பட்ஜெட் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.



