Puducherry:பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Advertisements

புதுச்சேரி:புதுவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவு அதேப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவைத் தட்டியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அந்தப் பெண் சத்தம் போட்டு அலறிக் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்குப் பொதுமக்கள் திரண்டு ஓடி வந்தனர்.இதனைக் கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்தப் பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *