
பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் போலியோ தடுப்பு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் போலியோ தடுப்பு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுகுட்பட்ட 52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.



