“மோடி ஒரு தேவதூதர்” – ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்!

Advertisements

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நடத்திய இருதரப்புச் சந்திப்பு உலக அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வரும் வர்த்தக மற்றும் தூதரக ரீதியிலான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. உறவைச் சீரமைக்கும் நோக்கில் அமைந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் பயணம் செய்த கப்பல்கள் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டினார். மேலும் “வணிகம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மாலுமிகளின் பாதுகாப்பு. அவர்களைக் காக்க அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று மோடி உறுதியாக வலியுறுத்தினார். பின்னர் ஹார்முஸ் நீரிணையை வணிகப் போக்குவரத்துக்குத் தடையின்றி திறந்து வைக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியைப் பற்றிப் பேசிய அதிபர் டிரம்ப், ஒட்டுமொத்த அரங்கையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், “பிரதமர் மோடி தேவதூதர் போன்ற இனிமையான மனிதர். அதே சமயம் கொள்கைகளில் மிகவும் உறுதியானவர். சமரசம் பேசுவதில் அவர் ஒரு மாஸ்டர்!”

மேலும், இந்தியா மேற்காசிய விவகாரங்களில் இனி பெரிய பங்கை வகிக்கப்போகிறது என்றும், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *