
பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக அவரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
இதில் மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை – நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
பின்னர் மக்களின் உணர்வுகளுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் இதனை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


