Pariyur Kondathu Kaliamman Temple: குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!

Advertisements

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவிலில்  நடைபெற்ற குண்டம்திருவிழாவில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்தஅருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஇந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாநடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருவிழாவானது கடந்த 27 ம் தேதி பூச்சாட்டுதலுடன்  தொடங்கியது.அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் கடந்த 15நாட்களாக நடைபெற்று வந்தது. அத னைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று இரவு முதல் அம்மனுக்கு சிறப்பு அரங்காரம் செய்யப்பட்ட பின் ஆறு கால பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்துபக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த 30 டன் அளவுடைய எரிகரும்புகளை கொண்டு குண்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டது.இரவு முழுவதும் விறகுகளை எரித்துக் குண்டம் தயார் செய்யப்பட்ட நிலையில்  இன்றுஅதிகாலை அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து  நந்தா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் கோயிலின் தலைமை பூசாரி ராமாணந்தம்கொண்டத்துக்கு சிறப்புப் பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார்.

அதன்பின்னர்கடந்த15நாட்களாகக்காப்புகட்டிவிரதமிருந்தகோபி,வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான   பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்நிகழ்ச்சிக்காக  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் கோபி துணை  காவல் கண்காணிப்பாளர்  தங்கவேல் மேற்பார்வையில் ஐநூறுக்குக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு  விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *