
தாங்கள் உங்கள் எல்லைக்குள் நுழைந்து, உங்கள் வீட்டிற்குள்ளேயே புகுந்து அடிப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது வேலையைக் காட்டினால், அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு இந்தியப் படைகள் பதிலடி கொடுக்கும் என்றார்.
இதுகுறித்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் இந்தியா மீண்டும் தாக்க முயன்றால், கடந்த ஆண்டை விட பெரிய அவமானத்தைச் சந்திப்பார்கள். தொடர்ந்து, இந்த முறை சண்டை வெறும் 200 முதல் 250 கிலோமீட்டருக்குள் வரை முடிந்துவிடாது.
தாங்கள் உங்கள் எல்லைக்குள் நுழைந்து, உங்கள் வீட்டிற்குள்ளேயே புகுந்து அடிப்போம் என்றும், சண்டையை கொல்கத்தா வரை கொண்டு செல்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இந்தியா தனது தோல்விகளை மறைக்கப் போலி ஆபரேஷன் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
தங்கள் ஆட்களின் சடலங்களை எல்லையில் போட்டுவிட்டு பயங்கராதிகள் எனக் கதை கட்டுகிறது என்று தெரிவித்தார்.




