Pakistan Economic Crisis: உணவுக்காக கையேந்தும் மக்கள்.. வீதிகளில் இறங்கி போராடும் அவலம்!

Advertisements

தேர்தலுக்கு முன்பாக பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது! பாகிஸ்தானில் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு சம்பாதிப்பதும் கடினமாகி வருகிறது.

உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வானளவு உயர்ந்துவிட்ட கோதுமை விலைக்கு எதிராக கில்கிட் பகுதியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் தேர்தலுக்கு முன்பாக பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, மேலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை சம்பாதிப்பது கூட கடினமாகி வருகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கோதுமை விலைக்கு எதிராக கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

கில்கிட்-பால்டிஸ்தானில் பீதி நிலவுகிறது, மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் முழுவதும் மின்சார கட்டணத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் தேர்தலுக்கு முன், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு சாப்பிடுவது கூட மக்களுக்கு சிரமமாக உள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் கோதுமையின் விலையை உயர்த்தியுள்ளதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைவாசி உயர்வுக்கு எதிராக கில்கிட்-பால்டிஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் வீதிகளில் இறங்கினர். பாகிஸ்தான்பொருளாதாரம் அதன் வரலாற்றில் மிக மோசமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது மற்றும் பணவீக்கம், வேலையின்மை, கறுப்பு சந்தைப்படுத்தல் ஆகியவையும் ஒரு பெரிய பிரச்சனையாகும்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. அண்டை நாடு பயங்கரமான கடன் வலையில் சிக்கியுள்ளதால் அங்கு மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மற்ற நாடுகள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடன் வழங்க மறுத்துவிட்டன. சமீபகாலமாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது, இதனால் மக்களின் செலவுகள் கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது கோதுமை விலை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவாமி நடவடிக்கைக் குழு (Awami Action Committee (AAC)) வணிகர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மானிய விலை கோதுமையின் விலையை உயர்த்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கில்கிட்-பால்டிஸ்தான் தவிர, நாட்டின் பிற பகுதிகளிலும் பணவீக்கத்திற்கு எதிராக பொது மக்கள் தெருக்களில் இறங்கினர்.

கில்கிட்-பால்டிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பொது வசதிகள் மற்றும் தேசிய வளங்களை அரசாங்கம் சமமற்ற முறையில் பகிர்ந்தளிப்பதாக பல உள்ளூர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி, இங்கு மின் நெருக்கடியும் உள்ளது. இந்தப் பகுதியில் ஒரு நாளில் 22 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றும், மக்கள் விவசாயத்திற்கு பழைய முறைகளையே நம்பியிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *