சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை – கே.என்.நேரு!

Advertisements

சென்னை:

நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்கியது.

சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.

எம்.எல்.ஏ. உதயசூரியன் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியது,

ஒரு காலத்தில் எங்கள் தொகுதியில் அணை கட்டுங்கள் எனக் கேட்பர். தற்போது 40-க்கும் மேல் அணைகள் கட்டப்பட்டு விட்டது.

அணை கட்டுவதற்கு ஆறுகள் இல்லாததால் தடுப்பணைகள் கேட்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வடக்குநந்தல் கோபி அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அத்திக்கடவு-அவினாசி 2-ம் கட்ட திட்டத்தில் தொண்டாமுத்தூரில் உள்ள குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை தேவை என்று எம்.எல்.ஏ. வேலுமணி கூறினார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், தொண்டாமுத்தூரில் உள்ள குளங்களில் நீர் நிரப்பும் கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் ஏற்பதாகக் கூறினார்.

வடசென்னையில் பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சீரமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்தார். அவர் கூறுகையில்,

வடசென்னையில் பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சீர் செய்யப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழாய்கள் சீர்செய்யும் பணி 2026-க்குள் நிறைவடையும்.

சென்னையில் ஜூலை மாதம்வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னையின் குடிநீர் தேவை 13.22 டிஎம்சியாக உள்ள நிலையில் தற்போது இருப்பு 15.56 டிஎம்சி உள்ளது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *