விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் அரசியல் இல்லை – அண்ணாமலை!

Advertisements

கோவை:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கியதைப் பற்றிப் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார், இது அரசியல் தொடர்புடையது அல்ல என அவர் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகத் தூண் கட்டப்படும். மத்திய அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.1,050 கோடி நிதி வழங்கி, எல்லோருக்கும் கல்வி திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்துள்ளது. கேட்டால் மழுப்பலான பதில்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு மத்திய அரசு ‘சிஆர்பிஎப்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அரசியல் தொடர்பு இல்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *