மொராக்கோவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 40 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மொராக்கோவில் கடந்த சில வாரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் இதுவரை 40 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது.

