Mexico : புரட்டிப்போட்ட கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 28 பேர் பலி.!

Advertisements

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 28 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன.இந்த கனமழைக்கு 28 பேர் உயிரிழந்தனர்.

மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வீடுகள் மூழ்கின. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் குறைந்தது ஆயிரம் வீடுகள், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன்.

17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள், மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கின. பியூப்லா மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேரை காணவில்லை. கனமழையால் சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக கியாஸ் பைப்லைன் உடைந்து சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணிக்காக, 8-ஆயிரத்து 700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

5 ஆயிரம் வீடுகள் சேதடைந்துள்ளது. கடற்படையினர் 900 மக்களை வெளியேற்றி, முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *